• Fri. Dec 26th, 2025

24×7 Live News

Apdin News

ஜோத்பூரில் மனு சிலை மீது கருப்பு மை பூசிய இந்த மும்பை பெண்களின் நிலை என்ன ஆனது?

Byadmin

Dec 26, 2025


அம்பேத்கர், மனுஸ்மிரிதி, மனு சிலை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டம்
படக்குறிப்பு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த காந்தபாய் அஹிரே மற்றும் ஷிலாபாய் பவார்

“2018-ஆம் ஆண்டில் டெல்லியில், அந்த மனுவாதிகள் எங்களின் அரசியலமைப்பை எரித்தனர். அந்த நேரத்தில் நான் ஒரு பெண்ணின் வீட்டில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் வேலையை செய்து வந்தேன்.

அப்போது அந்த பெண், ‘உங்களின் அரசியலமைப்புச் சட்டம் டெல்லியில் எரிக்கப்பட்டது’ என்றார். எனக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. நான் ஆத்திரமடைந்தேன். நான் அவரிடம், ‘உங்களின் கணவர் ஒரு அரசு அதிகாரி, அவர் மனுஸ்மிரிதியால் வாழ்கிறாரா அல்லது அரசியலைமைப்புச் சட்டத்தால் வாழ்கிறாரா’ எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து வந்தேன்,”

2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள மனு சிலை மீது கருப்பு சாயம் பூசிய காந்தபாய் அஹிரே உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்து கூறிய வரிகள் இவை.

காந்தபாய் மற்றும் அவரின் தோழி ஷிலாபாய் பவார் இணைந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பிறகு இருவரும் 6 நாட்கள் ஜெய்பூரில் போலிஸ் காவலிலும் 18 நாட்கள் சிறையிலும் கழித்தனர். பிபிசி மராத்தியிடம் பேசிய காந்தபாய் அந்த முழு சம்பவத்தை விவரித்தார்.

By admin