• Wed. Mar 5th, 2025

24×7 Live News

Apdin News

ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?

Byadmin

Mar 5, 2025


ஜோர்டான், கேரளா, புலம்பெயர் தொழிலாளர், கேரள நபர் சுட்டுக் கொலை, இஸ்ரேல் – ஜோர்டான் எல்லை , திருவனந்தபுரம், தாமஸ் கேப்ரியேல், அம்மான்

பட மூலாதாரம், Handout/Getty Images

படக்குறிப்பு, தாமஸ் கேப்ரியேல்

  • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
  • பதவி, பிபிசி தமிழ்

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 10-ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

வேலை தேடிச்சென்ற அவர், ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது ஜோர்டான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கேப்ரியேல். 47 வயதான இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவர் தமது உறவினரான 43 வயது எடிசன் மற்றும் மேலும் இரண்டு நபர்களுடன் சேர்ந்து வேலைக்காக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டிருந்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய தாமஸின் மனைவியின் சகோதரரான ரெக்ஸ், தாமஸிற்கு பணப் பிரச்னைகள் இருந்ததால் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்டதாக கூறினார்.

By admin