• Sat. Feb 8th, 2025

24×7 Live News

Apdin News

ஜோலார்பேட்டை: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

Byadmin

Feb 8, 2025


ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண், என்ன நடந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

“என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும் என சத்தம் போட்டேன். ஆனால், அந்த நபர் எனது வலது கையை உடைத்து ரயிலில் இருந்து வெளியில் தள்ளிவிட்டான்” எனக் கூறி கலங்குகிறார் ஆந்திராவை சேர்ந்த அந்தப் பெண்.

வியாழக்கிழமையன்று காலை (பிப்ரவரி 6) கோவை-திருப்பதி இன்டெர்சிட்டி ரயிலில் வந்த பெண்ணுக்கு ஜோலார்பேட்டை அருகே நேர்ந்த துயரம் இது.

இந்த வழக்கில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ற நபரை ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளது.



By admin