• Fri. Feb 28th, 2025

24×7 Live News

Apdin News

டாப் 5 செய்திகள்: சென்னையில் இளைஞரை கொன்று இன்ஸ்டாவில் ‘ரீல்ஸ்’ பதிவிட்ட கும்பல் – என்ன நடந்தது?

Byadmin

Feb 28, 2025


சென்னையில் இளைஞரைக் கொன்று இன்ஸ்டகிராமில் 'ரீல்ஸ்' பதிவிட்ட கும்பல் - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பிப்ரவரி 28 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

“சென்னை அண்ணா நகர் அருகே முகமூடி அணிந்த ஆறு நபர்கள் ராபர்ட் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியைக் கொலை செய்து அது தொடர்பான செய்தியை இன்ஸ்டாகிராமில் அந்தக் கொலை கும்பல் பதிவு செய்ததாக” டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், “புதன்கிழமை மாலை ராபர்ட் கொலை செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான தகவலை அந்தக் கொலை கும்பல் இன்ஸ்டகிராமில் ரீல்ஸாக பதிவு செய்து அதில், ‘ராபர்ட் மட்டை 100%’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது ராபர்ட் இறந்தது 100% உறுதியாகிவிட்டது என்று அவர்கள் இன்ஸ்டகிராமில் பதிவுட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மேலும், லோகு என்ற சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிக்கும் ராபர்ட்டுக்கும் இடையே கஞ்சா விற்பனையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin