• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

டாப் 5 செய்திகள்: தருமபுரியில் தந்தத்திற்காக கொன்று எரிக்கப்பட்ட யானை – என்ன நடந்தது?

Byadmin

Mar 7, 2025


தருமபுரியில் தந்தங்களுக்காக யானையை கொன்று எரிப்பு? - இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இன்றைய (07/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தந்தங்களுக்காக யானை ஒன்று கொல்லப்பட்டு அதன் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள நெருப்பூர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “மார்ச் மாதம் 1ஆம் தேதி அதிகாலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யானையின் இறப்பு தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யானை ஆணா, பெண்ணா என்பது தொடர்பான தகவலும், யானை துப்பாக்கியால் சுடப்பட்டதா என்பது தொடர்பான தகவலும் இடம் பெறவில்லை என்று கூறி வனநல ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By admin