• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

டாப்5 செய்திகள்: காஞ்சிபுரம் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

Byadmin

Mar 8, 2025


டாப்5 செய்திகள்

இன்றைய (08/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் தொழிற்சங்கம் அமைப்பதற்காக போராட்டம் நடத்திய 23 பேரை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்ததாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“காஞ்சிபுரம் மாவட்டம் கங்குவார் சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனிடையே பணி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 23 சி.ஐ.டி.யு. தொழிற்சங்க ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் தற்காலிக இடை நீக்கம் செய்தது.

இதனால் விரக்தியடைந்த மற்ற ஊழியர்கள் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

By admin