• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

டாமி தாம்ப்சன்: கடலில் மூழ்கிய கப்பலில் எடுத்த தங்கப் புதையலின் ஒரு பகுதி எங்கே?

Byadmin

Mar 16, 2026


நியூயார்க்கில் உள்ள அமெரிக்க நிதி வரலாற்று அருங்காட்சியகத்தில், 2003ஆம் ஆண்டு எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள அமெரிக்க நிதி வரலாற்று அருங்காட்சியகத்தில், 2003ஆம் ஆண்டு ‘எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா’ கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஒரு புகழ்பெற்ற கப்பல் மூழ்கிய இடத்தில் இருந்த தங்க நாணயங்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்த மறுத்த அமெரிக்க ஆழ்கடல் பொக்கிஷ வேட்டையாளர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இன்னும் 500 தங்க நாணயங்கள் கணக்கில் வரவில்லை.

73 வயதான டாமி தாம்ப்சன், 1988ஆம் ஆண்டு தெற்கு கரோலினா கடற்கரைக்கு அருகே 1857ஆம் ஆண்டு மூழ்கிய எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா (SS Central America) என்ற கப்பலிலிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள புதையலைக் கண்டுபிடித்தார். இது “தங்கக் கப்பல்” (Ship of Gold) என்றும் அழைக்கப்படுகிறது.

தாம்ப்சனின் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி செயல்படாமல் அவர் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தாம்ப்சன், 2015ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

1857ஆம் ஆண்டு கப்பல் மூழ்கிய போது, சான் பிரான்சிஸ்கோவில் புதிதாக தயாரிக்கப்பட்ட 30,000 பவுண்டு தங்கக் கட்டிகளை அது எடுத்துச் சென்றுகொண்டிருந்தது.

அது வங்கிகளுக்கான தங்கச் சேமிப்பாக பயன்படுத்தப்படவிருந்தது. ஆனால் 1857ஆம் ஆண்டு கப்பல் மூழ்கியபோது, அந்த பொக்கிஷம் 7,000 அடி ஆழத்தில் கடலுக்கடியில் சென்றது. இந்த விபத்தில் 425 பயணிகளும் கப்பல் பணியாளர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் 1857ஆம் ஆண்டின் பெரிய நிதி நெருக்கடிக்குக் காரணமாக அமைந்தது.

By admin