• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

டார்க் எனர்ஜி: பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? இருண்ட ஆற்றல் ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்

Byadmin

Dec 30, 2025


அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தனிமையான தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக மில்லியன் கணக்கான தொலைதூர விண்மீன் திரள்களைக் கண்காணித்து வருகிறது.

பட மூலாதாரம், KPNO/NOIRLab

படக்குறிப்பு, அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது.

இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது.

பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவு (பிக் கிரஞ்ச்) என்று அழைக்கப்படும் நிகழ்வுடன் முடிவுக்கு வரலாம் என்று தென்கொரிய குழுவின் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், ஒரு தலைமுறையின் மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.

பிற வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் இந்த விமர்சகர்களால் தென்கொரிய குழுவின் வாதங்களை முழுமையாக நிராகரிக்க முடியவில்லை.

இவை ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள். இருண்ட ஆற்றல் இவற்றைத் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேகத்தில் ஒன்றைவிட்டு ஒன்று பிரித்துச் செல்கிறது.

பட மூலாதாரம், NASA/ESA

இருண்ட ஆற்றல் என்றால் என்ன?

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்புடன் (பிக் பேங்) தொடங்கிய பிரபஞ்சத்தின் விரிவாக்கம், ஈர்ப்பு விசையினால் படிப்படியாக வேகம் குறையும் என்று வானியலாளர்கள் முன்பு நினைத்தார்கள்.

By admin