• Sat. Mar 15th, 2025

24×7 Live News

Apdin News

டாஸ்மாக் ஊழலை கண்டித்து மார்ச் 17-ல் போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு | Protest on March 17 to condemn TASMAC corruption: Annamalai

Byadmin

Mar 14, 2025


சென்னை: ​டாஸ்​மாக் நிறு​வனங்​களில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி முறை​கேட்டை கண்​டித்து மார்ச் 17-ல் ஆர்ப்​பாட்​டம் நடத்தப்பட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழகத்​தில் மது​பான விநி​யோக நிறு​வனங்​களில் நடை​பெறும் அமலாக்​கத் துறை சோதனை​யில் இருந்து மக்​களின் கவனத்​தை திசை​திருப்ப முதல்​வர் ஸ்டா​லின் முயற்​சித்து வரு​கிறார். தற்​போது கணக்​கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்​ச​மாகப்பெறப்​பட்​ட​தாக, மது​பான ஆலைகளில் இருந்து தொடர்​புடைய ஆவணங்​களை அமலாக்​கத்துறை கண்​டறிந்​துள்​ளது. இந்த விவ​காரத்​தில் தமிழக மக்​களுக்கு பதிலளிக்க வேண்​டிய கடமை முதல்​வருக்கு உள்​ளது.

மேலும், முதல்​வர் பதவி​யில் தொடர தனக்கு தார்​மீக உரிமை இருக்​கிறதா என்​றும் அவர் தன்னைத் தானே கேட்​டுக்​கொள்ள வேண்​டும். திமுக​வினர் நடத்​தும் சாராய ஆலைகள் பணம் சம்​பா​திப்​ப​தற்​காக நடத்​தப்​படும் டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்​தையே உலுக்​கி​யுள்​ளது. திமுக​வின் இந்த மெகா ஊழலை கண்​டித்து மார்ச் 17-ம் தேதி டாஸ்​மாக் தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள சென்னை தாள​முத்து நடராசன் மாளி​கையை முற்​றுகை​யிடும் போ​ராட்​டம் நடை​பெறும்.



By admin