• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

டிஜிபி நியமன சர்ச்சை: 3 பேரில் ஒருவரை நியமிப்பதில் என்ன பிரச்னை? தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுவது ஏன்?

Byadmin

Oct 26, 2025


 தமிழ்நாடு அரசு, டிஜிபி நியமனம், பாஜக, திமுக

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் காவல்துறை தலைவரான, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தை முன்வைத்து தி.மு.க அரசு மீது அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபியை நியமனம் செய்யாமல் மக்களின் பாதுகாப்புடன் முதலமைச்சர் விளையாடிக் கொண்டிருப்பதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் தலையீடு காரணமாகவே டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். டிஜிபியை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? தமிழ்நாடு அரசின் மீதான விமர்சனம் என்ன?

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால், கடந்த ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். ‘அடுத்த டி.ஜி.பி யார்?’ என்ற கேள்வி எழுந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.



By admin