• Fri. Aug 8th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் 50% வரியை இந்தியா அமைதியாக ஏற்குமா அல்லது 2019 போல பதிலடி தருமா?

Byadmin

Aug 8, 2025


டிரம்பின் 50% வரியை இந்தியா அமைதியாக ஏற்குமா அல்லது 2019 போல பதிலடி தருமா?

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. அந்தப் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவு, இந்தியாவை எதிர்பாராத விதமாக முக்கிய இலக்காக மாற்றியுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப், புதன்கிழமையன்று, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 25%-ல் இருந்து 50% ஆக உயர்த்தி அறிவித்தார். இந்த முடிவை இந்தியா, நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது

ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ஈட்டும் வருவாயை தடுத்து நிறுத்தி, யுக்ரேனுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தவே இந்த வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இறக்குமதி வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.

By admin