• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் 50% வரி: ஆம்பூர், வாணியம்பாடியில் நிலை என்ன? – உடனடி பாதிப்பை சந்திக்கும் தோல் தொழில்

Byadmin

Aug 28, 2025


LEATHER INDUSTRY

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகள் 50% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி கடுமையான சவால்களை எதிர்கொள்ள உள்ளது.

இந்த வரிகள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் (கான்பூர்) உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி மையங்களில் தயாரிப்புகள் நிறுத்தப்பட்டு, வேலை இழப்பு அபாயத்தில் உள்ளன.

புதிய தயாரிப்புக்கான ஆர்டர்கள் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்களும் தயாரிப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி இழப்புகள்

அமெரிக்காவிற்கான இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி 2025 நிதியாண்டில் மொத்தம் 1.2 பில்லியன் டாலராக இருந்தது. இந்தத் துறையில் இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் 20% அமெரிக்க ஏற்றுமதியாகும்.

By admin