• Tue. Jun 24th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்புக்கு நோபல் பரிந்துரைத்த பாகிஸ்தான் – இரான் மீதான தாக்குதலால் தர்மசங்கடம்

Byadmin

Jun 24, 2025


இஸ்ரேல் இரான் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானின் அணு ஆயுத நிலைகளின் மீதான தாக்குதலுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி இரானில் ஒன்று அமைதி நிலைநிறுத்தப்படும் அல்லது அங்கு ஒரு பெரும் துயரம் நிகழும் என தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் நிலைமை மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மொத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து ஒரு விவாதமும் தற்போது தொடங்கியிருக்கிறது.

தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தரவேண்டும் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்திருந்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலின் போது டிரம்ப் திட்டவட்டமான ராஜதந்திரத்தால் வெளிப்படுத்திய தலைமைப் பண்பு, யுத்தத்தின் விளிம்பில் நின்ற இருநாடுகளுக்கிடையில் அமைதியை நிலைநிறுத்த உதவியது என்பதுதான் இந்த பரிந்துரைக்கு முன்வைக்கப்பட்ட வாதம்.

ஆனால் மறுபக்கம், இரான்- இஸ்ரேல் மோதலில், பாகிஸ்தான் வெளிப்படையாக இஸ்ரேலை எதிர்த்ததுடன் இரானை ஆதரித்தது.

By admin