• Fri. Aug 8th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் இந்தியா மீது கோபமாக இருப்பதற்கான 5 காரணங்கள்

Byadmin

Aug 8, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோதி (கோப்பு புகைப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோதி (கோப்புப்படம்)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25% கூடுதல் இறக்குமதி வரி (tariff) விதித்துள்ளார். இந்த புதிய வரிகள் ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் சேர்த்து மொத்தம் 50% வரியாக இருக்கும்.

கூடுதல் வரி விதிப்பை அறிவித்த போது, இந்திய அரசு இன்னமும் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்பதால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்தது.

இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதில் சீனா பல மடங்கு முன்னிலையில் இருந்தபோதும் அமெரிக்கா இந்தியாவை குறிவைத்து இறக்குமதி வரியை விதிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

By admin