• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

டிரம்ப் தொடங்கிய அமைதி வாரியம் திணறும் ஐ.நாவுக்கு மாற்றாக உருவெடுக்குமா? – பகுப்பாய்வு

Byadmin

Jan 23, 2026


டிரம்பின் புதிய அமைதி வாரியம் திணறிக்கொண்டிருக்கும் ஐ.நாவை ஓரங்கட்டுமா?

“நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த வெறுப்பு மற்றும் மோதலை நிறுத்தவும், இந்தப் பிராந்தியத்திற்கும் உலகம் முழுவதற்குமான அழகான, நிலையான, மகத்தான அமைதியை உருவாக்க முடியும்.”

டாவோஸ் பொருளாதார மன்றத்தின் மேடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புதிய ‘அமைதி வாரியத்தை’ தொடங்கி வைத்தபோது அளித்த வாக்குறுதி இது .

ஆனால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் தலைநகரங்களில் இருக்கும் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்தின்படி, இது போருக்குப் (இரண்டாம் உலகப்போர்) பிந்தைய சர்வதேச கட்டமைப்பைச் சிதைத்து, டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் புதிய நிறுவனங்களைக் கொண்டு அவற்றை மாற்றியமைக்க முயற்சிப்பதற்கான மற்றொரு சான்றாகும்.

“யாரும் எங்களை வைத்து விளையாட அனுமதிக்க மாட்டோம்,” என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சமூக ஊடகங்களில் கடுமையாக எச்சரித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் தலைநகரங்களில் இருக்கும் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்தின்படி, இது போருக்குப் பிந்தைய சர்வதேச கட்டமைப்பைச் சிதைத்து, டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் புதிய நிறுவனங்களைக் கொண்டு அவற்றை மாற்றியமைக்க முயற்சிப்பதற்கான மற்றொரு சான்றாகும்.

பட மூலாதாரம், Reuters

ஆனால், ஐரோப்பாவில் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரான ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன.

By admin