• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணித்தது ஏன்?

Byadmin

Feb 2, 2026


 பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே பாகிஸ்தான் அரசு விடுத்துள்ள செய்தி ஒன்றில், “பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது” என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடாமல் இருக்க பரிசீலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் இந்த அறிக்கை அதனை உறுதி செய்துள்ளது.

கடந்த வாரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உடனான சந்திப்புக்குப் பிறகு, “அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தீர்வு காண பிரதமர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.

By admin