• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் டக் அவுட் – என்ன தவறு செய்கிறார் அபிஷேக் ஷர்மா?

Byadmin

Feb 19, 2026


அபிஷேக் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்றை தொடர்ந்து நான்காவது வெற்றியோடு சிறப்பாக முடித்திருக்கிறது இந்தியா. 100 சதவிகித வெற்றியோடு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தாலும், இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஒரு விஷயம் பெரும் கவலையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மா, நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆகியிருக்கிறார். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக ஆடாத அவர், அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து என மூன்று அணிகளுக்கு எதிராகவும் முதல் ரன்னை எடுப்பதற்கு முன்பே வெளியேறியிருக்கிறார்.

2024-ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆன அபிஷேக் ஷர்மா, தன்னுடைய முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனார். ஆனால், அடுத்த போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அந்த அறிமுக போட்டிக்குப் பிறகு 32 இன்னிங்ஸ்களில் அவர் தொடர்ச்சியாக ரன் எடுத்துக்கொண்டிருந்தார். 2025-ம் ஆண்டு அவர் பேட்டிங் செய்த 21 இன்னிங்ஸ்களிலுமே அவர் ரன் சேர்த்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு அது மாறிவிட்டது. 2026-ல் அவர் ஆடியிருக்கும் 8 இன்னிங்ஸ்களில் ஐந்து முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் இந்தியாவின் மிகமுக்கிய ஆயுதமாகக் கருதப்பட்டிருந்த அபிஷேக் இப்படி தொடர்ந்து ரன் எடுக்க சிரமப்பட்டுக்கொண்டிக்கிறார். இதுபற்றி இப்போது ரசிகர்கள் பரவலாக விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அபிஷேக் ஏன் தடுமாறுகிறார், அவர் என்ன செய்தால் இதிலிருந்து மீண்டு வரலாம், அவருக்குப் பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை நாம் அலசுவோம்.

என்ன நடந்தது?

அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் டக் அவுட் ஆனபோது அது பெரிதாக வருத்தம் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அந்த விக்கெட்டுக்கு முக்கியக் காரணம் – அமெரிக்க அணி வைத்திருந்த ஃபீல்டிங்.

By admin