இந்தியா இன்று தனது சூப்பர்-8 சுற்றை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ராம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இரு அணிகளும் கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாளர்கள். தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.
இன்றைய போட்டியில் துணை கேப்டன் அக்சர் படேல் விளையாட மாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
“தென்னாப்பிரிக்க அணியில் டி காக், ரிக்கில்டன், யான்சன் என நிறைய இடது கை பேட்டர்கள் இருப்பதால் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது. அதனால் அக்சர் பட்டேலுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்தார்.
டாஸின் போது பேசிய சூர்யகுமார் யாதவும். தான் வென்றிருந்தாலும் டாஸில் பந்து வீச்சு முடிவை எடுத்திருப்பேன் என்றார்.
தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், டேவிட் மில்லர் ஆகியோர் கடந்த போட்டியில் ஓய்வெடுத்திருந்த நிலையில் மீண்டும் அணியில் சேர்ந்தனர். தனது ஒரே போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்த எய்ன்ரிக் நார்கியா இடம்பெறவில்லை. ரபாடா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.