• Fri. Feb 6th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் விளையாடப் போவதில்லை என்று அறிவித்த பிறகும் இந்திய ஏன் இலங்கை செல்கிறது?

Byadmin

Feb 6, 2026


கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின, ஆனால் இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின, ஆனால் இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை.

அரசியல் பதற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், சனிக்கிழமை முதல் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசிஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது.

வங்கதேசம் ஏற்கனவே தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தாங்கள் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி விதிகளின்படி, பாகிஸ்தான் போட்டியில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிக்கான புள்ளிகளை அவர்கள் இழக்க நேரிடும். அதே நேரத்தில், அந்தப் போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச புள்ளிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்தியாவுடன் விளையாடாத முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முடிவின் விளைவாகத் தாங்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

By admin