• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?

Byadmin

Feb 22, 2025


சீனாவின் டீப்சீக் செயலியானது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை உருவாக்கும் செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாட்பாட்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் டீப்சீக்கைப் போல் இந்தியா அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை இன்னும் உருவாக்கவில்லை.

  • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பதவி, பிபிசி நியூஸ்

சாட்ஜிபிடி உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சீனாவின் டீப்சீக், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்குவதற்கான செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சாட்பாட்களை இயக்குவதற்குத் தேவையான அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

டீப்சீக் செயலிக்குச் சமமான இந்திய மாதிரி விரைவில் தயாராகும் என்று அரசாங்கம் கூறுகிறது. எனவே 10 மாதங்களுக்குள் அதை உருவாக்கத் தேவையான ஆயிரக்கணக்கான உயர்தர கணினி சிப்களை தொடக்கநிலை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது.

சமீபத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த செயற்கை நுண்ணறிவுத் தலைவர்கள் பலர், ஏஐ துறையில் இந்தியாவின் திறன்கள் குறித்துப் பேசி வருகின்றனர்.

By admin