• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

டென்னிஸ் ஹோப்: நிலவை ப்ளாட் போட்டு விற்று கோடீஸ்வரரான அமெரிக்கர் – தனி அரசையே உருவாக்கியது எப்படி?

Byadmin

Apr 11, 2026


நிலவை ப்ளாட் போட்டு விற்பனை செய்து கோடீஸ்வரர் ஆன நபர் – புத்திசாலித்தனமா? ஏமாற்றுவேலையா?
படக்குறிப்பு, விவாகரத்திற்குப் பிறகு, டென்னிஸ் ஹோப் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குத் தனது வாழ்வையே மாற்றிய அந்த மில்லியன் டாலர் யோசனை வந்தது.

இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்: சமீபத்தில் விவாகரத்து பெற்ற ஒரு மனிதர், அவரிடம் பணம் இல்லை, வருமானம் ஈட்டுவதற்கான வழிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளை வாங்கி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம் என்று அவர் நினைக்கிறார். பின்னர் ஒரு நாள், ஜன்னலுக்கு வெளியே பார்க்கும்போது திடீரென அவருக்கு, “அருமை! நான் நிலவை விற்றுவிடுகிறேன்” என்றொரு யோசனை தோன்றுகிறது.

இந்த யோசனை விசித்திரமாகவோ அல்லது நம்ப முடியாத ஒன்றாகவோ தோன்றக்கூடும். ஆனால், 1980ஆம் ஆண்டில் டென்னிஸ் ஹோப் என்ற அமெரிக்கர் சரியாக இதைத்தான் யோசித்ததாகக் கூறியுள்ளார். இந்த யோசனை தோன்றிய பிறகு, அவர் நிலவில் உள்ள தரைப் பகுதிகளை விற்று ஒரு கோடீஸ்வரரானார்.

அவரால் எப்படி இதைச் செய்ய முடிந்தது?

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் உள்ள “சட்டரீதியான தெளிவற்ற பகுதிகளை” பயன்படுத்தி அவர் இதைச் செய்துள்ளார்.

அதாவது, நிலவின் உரிமையாளர் யார் என்பது குறித்து சட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. எனவே அவர் இந்தக் குழப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதோடு, இந்த அசாதாரணமான யோசனையை அவர் மிகுந்த திறமையுடன் வெற்றிகரமான தொழிலாக மாற்றினார்.

By admin