• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம்  | Central Team inspection in Delta suddenly postponed

Byadmin

Oct 26, 2025


திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் கொட்டி வைத்​திருந்த நெல்​மணி​கள் முளை​விடத் தொடங்​கி​யுள்​ளன. அத்​துடன், பாதிக்​கப்​ப​டாத நெல்​மணி​களின் ஈரப்பத அளவும் அதி​கரித்து விட்​டது.

எனவே, நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக மத்​திய அரசு உயர்த்த வேண்​டுமென தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பிரதமர் மோடிக்கு அண்​மை​யில் கடிதம் எழு​தி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழகத்​தில் நேற்​றும், இன்​றும் (அக்​.25, 26) ஆய்வு செய்ய 3 குழுக்​களை மத்​திய உணவுத் துறை அனுப்​பி​யுள்​ளது.

இதில், திருச்​சி, புதுக்​கோட்​டை, தேனி, மதுரை ஆகிய மாவட்​டங்​களில் ஆய்வு செய்ய மத்​திய உணவுத் துறை துணை இயக்​குநர் ஆர்​.கே.சஹி தலை​மையி​லான குழு​வினரும், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, மயி​லாடு​துறை, கடலூர் ஆகிய மாவட்​டங்​களில் ஆய்வு செய்ய இணை இயக்​குநர் பி.கே.சிங் தலை​மையி​லான குழு​வினரும் நேற்று முன்​தினம் இரவு திருச்சி வந்து தனி​யார் ஓட்​டலில் தங்​கி​யிருந்​தனர்.

இந்​நிலை​யில், மத்​திய உணவுத் துறை அமைச்​சகத்​தில் இருந்து வந்த உத்​தர​வையடுத்து, செறிவூட்​டப்​பட்ட அரிசி உற்​பத்தி ஆலைகளில் ஆய்வு செய்ய ஆர்​.கே.சஹி தலை​மையி​லான குழு​வினர் நாமக்​கல்​லுக்​கும், பி.கே.சிங் தலை​மையி​லான குழு​வினர் கோவைக்​கும் திடீரென புறப்​பட்​டுச் சென்​றனர். அந்​தக் குழு​வினருடன் நுகர்​பொருள் வாணிபக்​கழக தரக்​கட்​டுப்​பாடு முது​நிலை மேலா​ளர் செந்​தில், மேலா​ளர் மணி​கண்​டன் ஆகியோ​ரும் சென்​றனர்.

இதனால், திருச்​சி, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர் மாவட்​டங்​களில் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் நேற்று நடை​பெற இருந்த ஆய்​வுப் பணி​கள் இன்று (அக்​.26) நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin