• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் இருந்து எத்தனை பேர் படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது..!- மு.க.ஸ்டாலின்

Byadmin

Apr 6, 2026


தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய பாஜக அமைச்சர்கள், முதலமைச்சர்கள் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? டெல்லி ஓனர்களிடம் எடப்பாடி பழனிசாமி பதிலை பெற்று தருவாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?

தமிழ்மண்ணில் நின்று, “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?

நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?

இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?

கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?

தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin