• Mon. Sep 22nd, 2025

24×7 Live News

Apdin News

டெல்லியில் தனியாக வாழ்ந்து 29 வயதில் மறைந்த சங்கர்; ஆப்ரிக்க யானையின் சோகக் கதை

Byadmin

Sep 22, 2025


டெல்லி மிருககாட்சிசாலையில் இருந்த ஆப்பிரிக்க யானை சங்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று.

இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.

டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

24 ஆண்டுகளாக, சங்கர் ஒரு தனிமையான வாழ்க்கையை அனுபவித்தது – இதில் குறைந்தது 13 ஆண்டுகள் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டிருந்தது.

அதன் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. “மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் சஞ்சீத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin