• Mon. Jan 12th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை – என்ன நடக்கிறது?

Byadmin

Jan 12, 2026


கரூர் சம்பவம் குறித்த டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சென்னையில் இருந்து விஜய் கிளம்பியபோது

கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜரானார்.

விசாரணைக்காக விஜய் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். அவரிடம் காலை சுமார் 11.30 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், விசாரணை முடிந்து மாலை சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார்.

கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்த குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, மேலும் கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக இந்த விசாரணையின்போது சிபிஐ கவனம் செலுத்துவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.

கரூர் சம்பவம் குறித்த டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், Getty Images

தவெக நிர்வாகிகளிடம் ஏற்கெனவே விசாரணை

இந்த வழக்கில் ஏற்கனவே அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் டெல்லியில் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.

கரூரில் கூட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, கரூருக்கு வரவழைத்து ஆய்வும் நடத்தப்பட்டது. அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

By admin