• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டிய பகுதிகள் இடிக்கப்பட்டது ஏன்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?

Byadmin

Jan 7, 2026


ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட காட்சி
படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் உள்ள துர்க்மேன் கேட்டிற்கு அருகில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகிலுள்ள ஆக்கிரமிப்புகள் நேற்றிரவு இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் இந்த நடவடிக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, உள்ளூர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது.

டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி நிதின் வல்சன், “சுமார் 25-30 பேர் கொண்ட கும்பல் போலீஸ் குழு மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது, இதில் ஐந்து போலீசார் சிறு காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இங்கே ஒரு திருமண மண்டபம் மற்றும் ஒரு மருந்தகம் இருந்தன, அவை இடிக்கப்பட்டன. உள்ளூர் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை இரவில் எடுக்கப்பட்டது,” என்று ஊடகங்களில் தெரிவித்தார்.

கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மசூதிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதப் பகுதியை அகற்றுவதற்காக நேற்றிரவு முப்பதுக்கும் மேற்பட்ட புல்டோசர்கள் மற்றும் லாரிகளுடன் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்.சி.டி) குழு சம்பவ இடத்திற்குச் சென்றது.

By admin