காணொளி: டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.
மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.
நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணு பிரகாஷ் நேரில் கண்டது என்ன என்பதை விளக்குகிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு