• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

டேபெண்டடால்: போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளை தடை செய்த இந்தியா

Byadmin

Feb 23, 2025


ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ், பிபிசி ஐ, புலன் விசாரணை

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று குறித்து பிபிசி ஐ நடத்திய புலனாய்வுக்குப் பிறகு, இந்திய அரசு டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் ஆகிய மருந்துகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏவியோ ஃபார்மசூட்டிகல் என்று அழைக்கப்படும் மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிறுவனம் முறையான உரிமம் இன்றி போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளை தயாரித்து வருகிறது என்று பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது.

இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியாக குறிப்பிட வேண்டும் என்றால் இந்த மருந்துகள் ஓபியாடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளான இவை போதைக்கு அடிமையாக்கும் தன்மைகளை கொண்டவை.

By admin