• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.80 லட்சத்தை எட்டுமா? முதலீடு செய்வது நல்ல முடிவா?

Byadmin

May 28, 2025


தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.80 லட்சத்தை எட்டுமா? புதிய ஆய்வறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு கிராம் தங்கத்தின் விலை 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று கணித்திருக்கிறது

ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2030ஆம் ஆண்டுவாக்கில் 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று கணித்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இடைக்காலத்தில் ஒரு அவுன்ஸ் (சுமார் 31.1 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 4,000 முதல் 5,000 டாலராகவும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது 8,900 டாலராகவும் உயரும் என சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கணித்திருக்கிறது. அதாவது, ஒரு அமெரிக்க டாலர் 83 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,751 ரூபாயை எட்டும். அதாவது ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 1.80 லட்சம் வரை உயரலாம் என்று அந்த அறிக்கை கணிக்கிறது.

லீக்கின்ஸ்டைனை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான இன்க்ரிமென்டம், சமீபத்தில் “Gold We Trust Report 2025” என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணங்களையும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வெகுவாக உயரும் என்ற கணிப்பிற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.

முக்கியமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.

By admin