• Tue. Jan 13th, 2026

24×7 Live News

Apdin News

தஞ்சையில் சிங்கப்பூர் மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்து அபகரிப்பா? புகாரின் முழு பின்னணி

Byadmin

Jan 13, 2026


'போலி ஆவணம் மூலம் ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு' : சிங்கப்பூர் மூதாட்டியின் தஞ்சை நிலத்தில் மோசடி நடந்ததா?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

“அவர்களை நான் எதிர்கொண்டபோது நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். ‘இனி ஒருபோதும் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என எச்சரித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் வயதான பெண் என்பதால் மிகவும் பயந்து உதவியற்றவளாக இருந்தேன்”

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 76 வயதான முகமதா பேகம் என்பவர் கொடுத்த புகாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தனது கணவருக்கு சொந்தமான சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துக் கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பேரில், அ.தி.மு.க பிரமுகர் உள்பட 12 பேர் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், மூதாட்டியின் விருப்பத்தின் பேரிலேயே நிலங்கள் விற்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கில் என்ன நடந்தது?

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?

சிங்கப்பூரில் வசித்து வரும் முகமதா பேகம் என்பவர் கடந்த டிசம்பர் மாதம், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை நேரில் அளித்தார்.

By admin