• Mon. Sep 15th, 2025

24×7 Live News

Apdin News

தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு | Auto driver dies of rabies 40 days after vaccination

Byadmin

Sep 15, 2025


சென்னை: சென்​னை​யில் தடுப்​பூசி செலுத்​திய நிலை​யில் 40 நாட்​களுக்​குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். சென்னை ராயப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் முகமது நஸ்ருதீன் (50). இவர் ஆட்டோ ஓட்​டுந​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

கடந்த ஜூலை 28-ம் தேதி பெசன்ட் சாலை​யில் உள்ள மீர்​சாகிப்​பேட்டை மார்க்​கெட்​டுக்கு அருகே இருக்​கும் ஆட்டோ ஸ்டேண்​டில், ஆட்​டோவை எடுப்​ப​தற்​காக அதில் ஏற முயன்​றார். அப்​போது ஆட்​டோவுக்கு கீழே படுத்​திருந்த தெரு​நாய் ஒன்று திடீரென முகமது நஸ்​ருதீனின் முழங்​கால் பகு​தி​யில் கடித்​தது.

அவர் நாயை துரத்​தி​விட்​டு, உடனடி​யாக அரு​கில் இருந்த ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்​குச் சென்று சிகிச்சை மேற்​கொண்​டார். தொடர்ந்து தடுப்​பூசி செலுத்​திய பின் வீடு திரும்பி தனது பணி​களைக் கவனித்து வந்​தார். இந்​நிலை​யில் கடந்த செப்.12-ம் தேதி முகமது நஸ்​ருதீனிக்கு காய்ச்​சல் ஏற்பட்டதால் மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார். அங்கு அவருக்கு ரேபிஸ் நோய் இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

இதை யடுத்து மேல் சிகிச்​சைக்​காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அவர் அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அங்கு தனி​யாக ஓர் அறை​யில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது. சிகிச்​சை​யின் போது ரேபிஸ் பாதிப்​பால் தண்​ணீர் குடிக்க முடி​யாமலும், உணவை உட்கொள்ள முடி​யாமலும் தொடர்ந்து அவதி​யுற்று வந்​தார்.

பின்​னர் சிகிச்​சைப் பலனின்றி முகமது நஸ்​ருதீன் நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தார். இந்த சம்​பவம் தொடர்​பாக ஐஸ் அவுஸ் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்டு தடுப்​பூசி செலுத்​திய பிறகும், 40 நாட்​களுக்​குப் பிறகு ஆட்டோ ஓட்​டுநர் உயி​ரிழந்த சம்​பவம் சென்​னை​யில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அதே​போல் ராயப்​பேட்டை ஹவுசிங் போர்டு பகு​தி​யைச் சேர்ந்​தவர் லட்​சுமி (65). இவர் தனது கணவர் ஜெய​பாலனுடன் வசித்து வருகிறார். நேற்று மதி​யம் தனது மகளின் பேரக் குழந்​தையைப் பார்ப்​ப​தற்​காக வீட்டை விட்டு வெளியே வந்​தார். அப்​போது பக்கத்து வீட்​டில் வசித்து வரும் பழனி (50) என்​பவர் தனது நாயை கயிற்​றில் கட்​டா​மல் அப்​படியே விட்​டிருந்​த​தாகக் கூறப்​படும் நிலை​யில், திடீரென்று லட்​சுமி​யின் வலது காலில் கடித்​துள்​ளது. இதில் காயமடைந்த லட்​சுமி சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாரிடம் புகார் அளித்​து​விட்​டு, மருத்​து​வ​மனை​யில்​ சிகிச்​சை மேற்​கொண்​டுள்​ளார்​.



By admin