• Fri. Oct 31st, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் | Tender for offshore wind farm project in Tamil Nadu

Byadmin

Oct 31, 2025


சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார்.

‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி உள்​ளிட்​டோர் கலந்​து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், தமிழக மின்​துறை அமைச்​சர் சிவசங்​கர் பேசுகை​யில், “25 ஆயிரம் மெகா​வாட் திறனுடன் தேசிய அளவில் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி​யில் 4-வது இடத்​தில் உள்​ளோம். 1990-களில் எரிசக்தி வங்​கியை அறி​முகப்​படுத்​திய முதல் மாநிலம் தமிழகம். புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​களில் முதலீடு​களை ஈர்ப்​ப​தற்கு சுற்​றுச்​சூழலுக்கு உகந்த வழிகளை தமிழகம் செய்​துள்​ளது” என்​றார்.

தொடர்ந்து பேசிய மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி, “இந்​தி​யா​வின் மொத்த மின்​சார நிறு​வுத் திறன் 257 மெகா​வாட். அதில், காற்​றாலை ஐந்​தில் ஒரு பங்கை வகிக்​கிறது. உள்​நாட்டு உற்​பத்தி வளர்ச்​சியை முன்​னெடுத்துச் செல்ல காற்​றாலை ஆற்​றல் முக்​கியப் பங்கு வகிக்​கிறது. 2030-ம் ஆண்​டுக்​குள் உலகளா​விய காற்​றாலை விநி​யோக சங்​கி​லி​யில் இந்​தியா 10 சதவீத பங்கைப் பெறும் திறன் கொண்​டுள்​ளது” என்​றார்.

நிகழ்ச்​சிக்கு பின், அமைச்​சர் பிரகலாத் ஜோஷி, செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி நிருபர்​களிடம் கூறிய​தாவது: நாட்​டின் காற்​றாலை மின்​சார மொத்த நிறு​வுத்​திறன் தற்​போது 54 கிகா வாட். மேலும், 30 கிகாவாட்​டுக்​கான திட்​டங்​கள் செயல்​பாட்​டில் உள்​ளன. 2030-ம் ஆண்​டுக்​குள் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி திறனை 500 கிகா​வாட் ஆக உயர்த்த இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்ளது. அண்​மையில் மேற்​கொள்​ளப்​பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்​பு, புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறைக்கு செல​வு​களை குறைத்​துள்​ளது, அதாவது, ஒரு மெகா​வாட்​டுக்கு ரூ.25 லட்​சம் வரை சேமிப்பு கிடைத்​துள்​ளது.

தமிழகம் மற்​றும் குஜ​ராத்​தில் தலா 500 மெகா​வாட் திறனில் கடல் காற்​றாலைகள் அமைக்க திட்​ட​மிடப்​பட்டு குஜ​ராத்​தில் டெண்​டர் கோரப்​பட்​டது. நிறு​வனங்​கள் பங்​கேற்​காத​தால் டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டது. தமிழகத்தை பொறுத்​தவரை ஓர் ஆண்டு முழு​வதும் தரவு​கள் சேமிக்​கப்​பட்டு ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

முடிவு​கள் மிக​வும் ஊக்​கமளிக்​கும் வித​மாக உள்​ளன. திறன் பயன்​பாடு காரணி 45 முதல் 50 சதவீதம் வரை உள்​ளது. தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்கு அடுத்த ஆண்டுபிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும். மே, ஜூன் மாதங்​களில் பணி​கள் தொடங்​கப்​படும். உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை மின்கட்​டமைப்​பு​களில் சரி​யாக சேர்க்க மின் வழித்​தடங்​களை வலிமைப்​படுத்​தும் திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறோம். மாநிலங்​களை அதை மேற்​கொள்ள அறி​வுறுத்​தி​யுள்​ளோம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.



By admin