• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு வரும் லாரிகளிடம் வசூல் செய்யும் திமுகவினர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு  | DMK collect money from trucks coming to quarries: Nainar Nagendran

Byadmin

Oct 25, 2025


சென்னை: தமிழகம் முழு​வதும் கல்​கு​வாரி​களில் லாரி​களிடம் இருந்து குறிப்​பிட்ட தொகையை திமுக​வினர் வசூல் செய்து வரு​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பாஜக சார்​பில் இரண்​டாவது கட்ட சுற்​றுப்​பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும் ஆட்​சி​யின் குறை​பாடு​களை, சுட்​டிக்​காட்டி அதில் பேச இருக்​கிறேன். தஞ்​சாவூரில் சேதமடைந்த நெல் மூட்​டைகளை பார்​வை​யிட்​டு​விட்​டு, விவ​சா​யிகளுக்கு ஆறு​தல் கூற​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் நடந்து கொண்டு இருப்​பது நல்ல ஒரு ஆட்​சியாக இருந்​தால், உடனடி​யாக விவ​சா​யிகளிட​மிருந்து நெல்லை, கொள்​முதல் செய்​து, அந்​தந்த உணவுக் கிடங்​கு​களுக்கு அனுப்பி சேதமடையாமல் பாதுகாத்திருக்க வேண்​டும்.

ஆனால் அதில் கால​தாமதம் ஏற்​படு​வதோடு, ஒரு மூடைக்கு ரூ.40 கமிஷன் கேட்​ப​தாக​வும், குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன. எனவே நெல் கொள்​முதலை, அரசு சரி​யான முறை​யில் கையாள​வில்லை என்​பது எங்​களது குற்​றச்​சாட்​டு. கல்​கு​வாரி​களில் நடை பெறும் முறை​கேடு​கள், திரு நெல்​வேலி மாவட்​டத்​தில் மட் டுமல்ல, தமிழகம் முழு​வதுமே நடந்து கொண்டு இருப்​ப​தாக​வும், ஆளுங்​கட்​சி​யினர்​தான் அனைத்து கல்​கு​வாரி​களி​லும் ஒரு லாரிக்கு குறிப்​பிட்ட தொகையை பெறு​வ​தாக​வும், குற்​றச்​சாட்டு உள்ளது.

அரசு அதி​காரி​கள் நியாய​மாக நடந்து கொள்ள வேண்​டும். அதே​நேரத்​தில், அதி​காரி​களை நாகரீக​மாக நடத்த வேண்​டும். அதி​காரி​களை மதிக்​காத கூட்​டணி தான் தி​முக கூட்​ட​ணி. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



By admin