இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால், மூன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழக இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், 2 ஆண்டு கரோனா இடை வெளிக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெறும் 10,300 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்து ஏமாற்றியது.
மேலும், 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்தாமல் போட்டித் தேர்வர்கள் வயிற்றில் அடித்தது. இதைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெறும் 9,532 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பி வஞ்சித்தது. இந்நிலையில் ஆட்சி முடியும் கடைசி ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகமிகக் குறைந்த அளவாக 3,945 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்து திமுக அரசு அதிர்ச்சியளித்தது.