• Mon. Sep 15th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Chance of heavy rain until September 19

Byadmin

Sep 15, 2025


சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, வடக்கு தெலங்​கானா மற்​றும் அதையொட்டிய விதர்பா பகு​தி​களில் நில​வியது. இது, மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​திய விதர்பா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப். 15) ஓரிரு இடங்​களி​லும், நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தரு​மபுரி, திருப்​பத்​தூர், சேலம், வேலூர் மாவட்​டங்​களி​லும், 17-ம் தேதி கிருஷ்ணகிரி, தரு​மபுரி, திருப்​பத்​தூர், சேலம், வேலூர், ராணிப்​பேட்​டை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம் மாவட்​டங்​களி​லும், 18-ம் தேதி சேலம், திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், கடலூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், அரியலூர், பெரம்​பலூர், மயி​லாடு​துறை மாவட்​டங்​களி​லும், 19-ம் தேதி திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, வேலூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் அதையொட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக சென்னை பாரி​முனை​யில் 11 செ.மீ. திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்​டை, சென்னை கொளத்​தூரில் 9 செ.மீ. திரு​வள்​ளூர் மாவட்​டம் பொன்​னேரி​யில் 8 செ.மீ. பெரம்​பூர், வில்​லி​வாக்​கத்​தில் 7 செ.மீ. தண்​டை​யார்​பேட்​டை, ஆட்​சி​யர் அலு​வல​கம், விம்​கோநகர், கொரட்​டூர், காசிமேடு, திரு​வள்​ளூர் மாவட்​டம் சோழ​வரம், கும்​மிடிப்​பூண்டி ஆகிய இடங்​களில் 6 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது.இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.



By admin