• Thu. Feb 13th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே அதிகபட்ச மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: ​​அண்ணாமலை உறுதி | Highest magalir urimai thogai in the country will be provided: Annamalai

Byadmin

Feb 13, 2025


சென்னை: தமிழகத்​தில் பாஜக​வின் வெற்றி தாமதப்​பட்​டிருக்​கிறது. 2026-ல் பாஜக நிச்​சயம் வெற்றி பெறும். தமிழகத்​தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்​டிலேயே எந்த மாநிலத்​தி​லும் இல்லாத அளவுக்கு அதிகபட்​சமாக மகளிர் உரிமை தொகை தமிழகத்​தில் வழங்​கப்​படும் என்று சென்னை​யில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்​டத்​தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரி​வித்​தார்.

தமிழக பாஜக சார்​பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்டம் சென்னை திரு​வான்​மியூரில் நேற்று நடைபெற்​றது. இந்த கூட்​டத்​தில் அண்ணாமலை பேசி​யது: மத்திய பட்ஜெட்​டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், தமிழகத்​தில் குறைந்​த​பட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்​றனர்.

தாய்​மொழி​யில் தமிழக மாணவர்கள் பின்​தங்கி உள்ளதாக ஓர் ஆய்வறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழ் மொழியை சொல்லி அரசியல் செய்​யும் திமுக இதற்கு வெட்​கப்பட வேண்​டும். இந்தியா​வில் அனைத்து இடங்​களி​லும் தமிழை கொண்டு செல்ல வேண்​டும் என்றால், அனைத்து மாநிலங்​களி​லும் தமிழ் பல்கலைக்​கழகம் தொடங்க வேண்​டும். தமிழக அரசு அதற்கான முயற்​சியை செய்​தால், நிதியை மத்திய அரசிடம் பாஜக பெற்று தரும்.

ஒருங்​கிணைந்த பள்ளிக்​கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டம் குறித்து முதல்வர் ஸ்டா​லின் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிக்​கொண்​டிருக்​கிறார். அதேபோல, 2026-ல் 35 ஊழல் அமைச்​சர்​களும் சிறைக்கு செல்வார்கள். தமிழகத்​தில் 2026-ல் பாஜக நிச்​சயம் வெற்றி பெறும். தமிழிசை தலைமை​யில் ஒரு குழு அமைக்​கப்பட உள்ளது. அந்த குழு இந்தியா முழு​வதும் பாஜக ஆட்சி​யில் இருக்​கும் மாநிலங்​களுக்கு சென்று, முதல்​வர்களை சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் நலத்​திட்​டங்களை பார்த்து​விட்டு, 2026 பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்​வார்​கள். மகாராஷ்டிரா​வில் தற்போது தமிழகத்​தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்​கப்​படு​கிறது. டெல்​லி​யிலும் ரூ.2,500 அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

2026-ல் தமிழகத்​தில் பாஜக ஆட்சி வந்தால், பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லா​வற்​றை​யும்​விட, மாதம்​தோறும் பெண்​களுக்கு வழங்​கப்​படும் உதவி தொகை நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் அதிகமாக இருக்​கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்​னாள் தலைவர் தமிழிசை பேசும்​போது, “ஆன்​மிகம்​தான் தமிழகத்தை காக்கப் போகிறது. பாஜக​தான் தமிழகத்தை ஆளப்​போகிறது. இந்த அக்கா​வும், தம்பி அண்ணா​மலை​யும் சேர்ந்து ஸ்டா​லினை வீட்டுக்கு அனுப்பு​வோம். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்​தது​தான் தமிழ் என தெரிய வேண்​டும். பெரி​யார் வளர்த்தது தமிழ் அல்ல, பெரி​யாழ்​வார் வளர்த்​தது​ தான் தமிழ் என அவர்கள் புரிந்து கொள்ள வேண்​டும்” என்றார்.

மாநில துணை தலைவர்கள் கரு.நாக​ராஜன், சக்கர​வர்த்தி, நாராயணன் திருப்​பதி, மாநில செய​லா​ளர் க​ராத்தே ​தி​யாக​ராஜன், பிரமிளா சம்பத், சுமதி வெங்​கடேசன், ​மாநில ​விளை​யாட்டு, ​திறன் மேம்​பாட்டு பிரிவு தலை​வர் அமர்​பிரசாத் ரெட்டி, ​செய்தி தொடர்​பாளர் ஏஎன்​எஸ் பிரசாத் உள்​ளிட்ட ​மாநில, ​மாவட்​ட நிர்​வாகிகள்​ பங்கேற்றனர்.



By admin