• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Rain likely in Tamil Nadu till 20th

Byadmin

Aug 15, 2025


சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, இன்று தெற்கு ஒடி​சா-வடக்கு ஆந்​திரா பகு​தி​களை கடக்​கக் கூடும்.

தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (ஆக .15) தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஓரிரு இடங்​களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வரும் 16 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​தி​க்குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin