• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு | H Raja alleges 6700 murders in tn in 45 months

Byadmin

Sep 10, 2025


நாகப்பட்டினம்: தமிழகத்​தில் கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ள​தாக பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறினார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சில ஆயிரம் கோடியை முதலீ​டாகப் பெறு​வதற்​காக தமிழக முதல்​வர் ஸ்டா​லின் இங்​கிலாந்​து, ஜெர்​மனி போக வேண்​டிய அவசி​யமில்​லை.

ஏற்​கெனவே, முதல்​வர் குடும்​பத்​துடன் வளை​குடா நாடு​களுக்​குச் சென்​றார். அங்​கிருந்து எவ்​வளவு முதலீடு கொண்​டு​வந்​தார் என்​பது தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும்.

ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழத்​தில் பெரி​யார் படத்தை திறந்​து​வைத்​தேன் என்று முதல்​வர் பெரு​மை​யாக பேசுகிறார். அந்​தப் பல்​கலைக்​கழகம் படத் திறப்பு விழாவை நடத்​த​வில்​லை. அங்கு பணம் கட்​டி​னால், யார் வேண்​டு​மா​னாலும் படம் திறந்து வைக்​கலாம், கூட்​டம் நடத்​தலாம்.

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ளன. பாலியல் வன்​கொடுமை​கள், போதைப் பொருட்​கள்பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மீண்​டும் திமுக அரசு அமைந்​தால் அடுத்த தலை​முறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலை​முறையை காப்​பாற்ற திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு அரசி​யலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.



By admin