• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் | 59 DSP transferred across Tamil Nadu

Byadmin

Nov 3, 2025


சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் 59 டிஎஸ்​பி-க்​கள் (காவல் துணை கண்​காணிப்​பாளர்) பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் பிறப்​பித்​துள்​ளார்.

அதன்​படி, காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்​கும், மதுரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி செந்​தில்​கு​மார் சென்னை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு தலை​மையகத்​துக்​கும் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை பொருளா​தார குற்​றத்​தடுப்பு பிரிவு தலை​மையக டிஎஸ்பி பூசை துரை, டிஜிபி அலு​வல​கத்​தில் உள்ள சமூக ஊடக கண்​காணிப்பு பிரிவுக்​கும், மாநில சைபர் க்ரைம், கமாண்ட் மையத்​தின் டிஎஸ்​பி​யாக பணி​யாற்​றிய இலக்​கி​யா, வேலூர் போதைப்​பொருள் புல​னாய்வு பிரிவுக்​கும் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

புதுக்​கோட்டை மாவட்ட குற்ற ஆவண காப்​பகத்​தின் டிஎஸ்பி குமார் சென்னை பொருளா​தார குற்​றப் பிரிவு தலை​மையகத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். இவர்​கள் உட்பட தமிழகம் முழு​வதும் மொத்​தம் 59 டிஎஸ்​பி-க்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்​.



By admin