• Sun. Sep 21st, 2025

24×7 Live News

Apdin News

தமிழர் பெருமை: காற்றாலை மனிதர் கஸ்துாரி ரங்கையன்!

Byadmin

Sep 21, 2025


15 நாட்கள் உற்பத்தி செய்வேன். அடுத்த 15 நாட்கள் மார்க்கெட்டிங் செய்வேன் என்கிறார் கஸ்தூரி ரங்கையன்.
படக்குறிப்பு,

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் முதல் கட்டுரை.)

”தொழிலுக்கு அடிப்படை மின்சாரம். காற்றாலை மின்சாரமே, சூழலுக்கும் உகந்தது, செலவு குறைவானது. அந்த வகையில் காற்றாலை மின்சார உற்பத்தி தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. அதில் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தவர் கஸ்துாரி ரங்கையன். அதனால்தான் அவர் காற்றாலை மனிதர்!”

இப்படி அறிமுகம் தருகிறார், ‘கோவைக்கும் தொழில் என்று பேர்’ நுாலாசிரியர் சி.ஆர்.இளங்கோவன். கோவை குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 10 நுால்களை இவர் எழுதியுள்ளார்.

காற்றாலை மின் உற்பத்தியில் மட்டுமின்றி, வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் கோவை இன்றைக்கு முன்னிலையில் இருப்பதற்கு முன்னோடியாக இந்த தொழிலைத் துவக்கி வைத்தவர் கஸ்துாரி ரங்கையன் என்கிறார் கோவையின் மூத்த தொழிலதிபரான ஏ.வி. என்கிற ஏ.வரதராஜன்.

By admin