• Fri. Feb 14th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு அரசு அவசர கதியில் 658 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முயல்வது ஏன்? என்ன சிக்கல்?

Byadmin

Feb 13, 2025


தமிழ்நாடு அரசு அவசர கதியில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை நியமிக்க விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியை மாநில சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இந்த இடங்களுக்கு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் வாக்-இன் இன்டர்வியூ, அதாவது உடனடி நேர்காணல் நடத்தி மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறைக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் 270 மகப்பேறு மருத்துவர் இடங்கள் உள்பட, 658 உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவர்கள் குறிப்பிட்ட தேதியில் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் இந்த முடிவை அரசு மருத்துவர் சங்கங்கள் பல, கடுமையாகக் கண்டிக்கின்றன. இந்த முடிவு வெளிப்படைத் தன்மையற்றது, பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து, ஏற்கெனவே பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்குப் பாதகமானது ஆகிய காரணங்களால் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில், 270 மகப்பேறு மருத்துவர்கள், 16 இதயவியல் மருத்துவர்கள், 16 நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 50 தடயவியல் மருத்துவர்கள், 12 முதியோர் நல மருத்துவர்கள், 71 மயக்கவியல் மருத்துவர்கள், 121 பொது மருத்துவர்கள், 121 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 42 கதிரியக்கவியலாளர்கள், ஒரு எலும்பு மூட்டு மருத்துவர் இடங்கள் காலியாக உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் காலிப் பணியிடங்களின் பட்டியலை வாசித்தார்.

By admin