• Fri. May 16th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றுமா குடியரசுத் தலைவரின் கேள்வி?

Byadmin

May 15, 2025


உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

‘ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச ​​நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா’ என உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?” என்பது உள்பட 14 கேள்விகளையும் முன்வைத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில், குடியரசுத் தலைவர் கருத்து கேட்டு குறிப்பு அனுப்புவது அந்தத் தீர்ப்பை பாதிக்குமா? இந்த நகர்வு குறித்து தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

குடியரசுத் தலைவரின் ‘குறிப்பு’ என்றால் என்ன?

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தமிழ்நாடு அரசின், பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது ‘சட்டவிரோதம்’ எனக்கூறி, சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம்.



By admin