• Tue. Feb 4th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: காவல்துறை தேர்வில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் ஏடிஜிபியின் அறை எரிக்கப்பட்டதா?

Byadmin

Feb 4, 2025


காவல்துறை தேர்வில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் ஏடிஜிபியின் அறை எரிக்கப்பட்டதா?

பட மூலாதாரம், X

காவல்துறையினர் தேர்வில் இருந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தனது அறை எரிக்கப்பட்டதாக தமிழக ஏடிஜிபி ஒருவர் குற்றம்சாட்டிய கடிதம் வெளியாகியிருக்கிறது.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை காவல் துறை மறுத்திருக்கிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபி மற்றும் உறுப்பினராக இருந்தவர் கல்பனா நாயக்.

சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலக அறை, கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் தீ பிடித்து எரிந்தது.

By admin