• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு முழுக்க திடீரென டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ரத்தானது ஏன்? தேர்வுகளை நடத்தத் திணறுகிறதா?

Byadmin

Feb 9, 2026


தேர்வுகளை நடத்தத் திணறுகிறதா டிஎன்பிஎஸ்சி? எங்கே தவறு நடந்தது?

பட மூலாதாரம், TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி எட்டாம் தேதி நடத்தியிருக்க வேண்டிய ‘குரூப் 2’, ‘2 ஏ’-வுக்கான தேர்வுகளை நடத்துவதில் சென்னையில் சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டதால், மாநிலம் முழுவதும் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கை தேர்வர்களிடம் பெரும் மன அழுத்தத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தேர்வுகளை நடத்துவதில் டிஎன்பிஎஸ்சிக்கு என்ன சிக்கல்?

சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, சென்னையில் தங்கியிருந்து யுபிஎஸ்சி தேர்வுக்கும் தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்திய ‘குரூப் 2’ முதல் நிலைத் தேர்வில் (prelims) தேர்ச்சியும் அடைந்துவிட்டார்.

பிப்ரவரி எட்டாம் தேதி அவர் முதன்மைத் தேர்வை (Main) எழுத வேண்டும். அரும்பாக்கத்திலிருந்த டி.ஜி. வைஷ்ணவா கல்லூரிதான் அவருக்கு தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வு. 8.35 மணியளவில் தேர்வு மையத்திற்குச் சென்றுவிட்டார் கார்த்திக் ராஜா. ஆனால், அதிர்ச்சி காத்திருந்தது.

By admin