• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: ரேஷன் கடைகளில் வங்கி சேவை, மினி ஏ.டி.எம் திட்டம் – இதன் பயன்கள் என்ன?

Byadmin

Oct 25, 2024


ரேஷன் கடை, தமிழ்நாடு அரசு, சேமிப்பு, வங்கிச் சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரேஷன் கடைகளில் மினி ஏ.டி.எம் கொண்டு வரும் திட்டம் உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ் கூறுகிறார் (கோப்புப் படம்)

ரேஷன் கடைகள் மூலமாக வங்கி சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் மினி ஏ.டி.எம் கொண்டு வரும் திட்டம் உள்ளதாகவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ் கூறுகிறார்.

ஆனால், இந்தத் திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை என்கின்றன, கூட்டுறவு ஊழியர் சங்கங்கள். அதோடு, ஊக்கத்தொகை, போனஸ் உள்பட அரசின் சலுகைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக ரேஷன் ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், ரேஷன் கடை ஊழியர்கள் வங்கி சேவைகளை நேரடியாக வழங்க மாட்டார்கள் என்றும் சேமிப்புக் கணக்கு தொடங்குவது உள்ளிட்ட வசதிகளை மட்டுமே செய்து கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

By admin