• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியதா?

Byadmin

Feb 10, 2025


தமிழ்நாடு vs மத்திய அரசு, திமுக, பாஜக, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சமக்ரா ஷிக்‌ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு அளித்துவிட்டதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், இன்னும் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மு.க.ஸ்டாலின் பொய்யைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சமக்ரா ஷிக்‌ஷா அபியான் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் கல்வி நிதி என்பது மாநிலத்தின் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனால், வளர்ந்த மாநிலங்களைவிட வளரும் மாநிலங்களுக்கே, இத்தகைய நிதியின் தேவை அதிகமாக இருப்பதை உணர வேண்டும் என்கிறார் தமிழ்நாடு பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி.

By admin