• Mon. Mar 3rd, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன? 11 கேள்வி – பதில்கள்

Byadmin

Mar 3, 2025


ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்களிடம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (FLAT) அல்லது தனி வீடுகள் (VILLA) வாங்க முன்பதிவு செய்த பிறகு உரிய நேரத்தில் சிலர் வீடு கிடைக்காமல் தவிக்க நேரிடுகிறது. இத்தகைய சூழலில் நீதிமன்றங்களையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் பாதிக்கப்பட்டோர் நாடி வருகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கு, வீடுகளை வாங்க ஒப்பந்தம் போடும் போதும், அதன்பின்னும் கவனிக்க வேண்டிய விஷயங்களைக் குறித்து விளக்குகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு.

என்ன பிரச்னை?

கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் கிணத்துக்கடவைச் சேர்ந்த மங்கையர்க்கரசி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். “காளப்பட்டி பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்தில் ஒரு வீடு (FLAT) வாங்குவதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் செலுத்தி, ஒப்பந்தம் செய்யப்பட்டது. பத்திரப்பதிவு முடிந்தபின், மீதித்தொகையைத் தர வேண்டுமென்பது ஒப்பந்தம். ஆனால் அதற்கு முன்பாகவே, கிளப் ஹவுஸ் கட்டுவதற்கு பணம் செலுத்துமாறு அந்த நிறுவனம் கேட்டது.

அதனை ஏற்காமல், முன்பணத்தைத் திரும்பக் கேட்டு, இ-மெயிலில் முறையிட்ட போது, அதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டாலும் பணம் திருப்பித் தரப்படவில்லை” என்று அந்த மனுவில் மங்கையர்க்கரசி குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையம், மங்கையர்க்கரசிக்கு முன் பணத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரமுமாக ரூ.15 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல், சென்னை மணப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அவர் கொடுத்த 2.02 கோடி ரூபாயை ஆண்டுக்கு 10.25 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க கட்டுமான நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மன உளைச்சலுக்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்குச் செலவுக்கு ஒரு லட்சமும் சேர்த்து வழங்க கட்டுமான நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

By admin