• Sun. Nov 23rd, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் எஸ்.சி மக்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை விகிதம் குறைவு – ஏன்?

Byadmin

Nov 23, 2025


தமிழ்நாடு, தேசிய குற்ற ஆவணக் காப்பகம், எஸ்சி/எஸ்டி வழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டியலின மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டில் 12.2 சதவிகிதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘ (கோப்புப்படம்)

தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டில் 12.2 சதவிகிதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘இது தேசிய சராசரியில் (31.9%) பாதியளவு கூட இல்லை’ என்கிறது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

பட்டியல் சாதி மக்களுக்கு அரசியல்ரீதியாக பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாததால் அவர்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. இதனை தி.மு.க மறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை விகிதம் குறைந்துள்ளதா? இதர மாநிலங்களில் என்ன நிலவரம்?

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக நடந்துள்ள குற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

By admin