• Mon. Feb 10th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி – விவசாய சேதத்தைக் குறைக்குமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?

Byadmin

Feb 9, 2025


காட்டுப்பன்றி

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகளுக்கு ஏற்படும் பலவிதமான பாதிப்புகளைத் தடுப்பதற்காக, காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான பயிற்சி, தமிழக வனத்துறையினருக்கு கோவையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சுட்டுக்கொல்வதை விட, அவற்றை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவைப் போல சுட்டுக்கொல்லும் அனுமதியை எளிதாக்க வேண்டுமென்று சில விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அப்படி எப்போதுமே அனுமதியளிக்க முடியாது என்று தமிழக வனத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும், மனித – வன உயிரின மோதல்கள் நடப்பது, அதிகரித்து வருகிறது.

By admin