• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் கொத்தடிமையாக இருந்த அப்பாராவ் ஆந்திராவில் தனது குடும்பத்துடன் இப்போது என்ன செய்கிறார்?

Byadmin

Mar 21, 2025


அப்பாராவ்

தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கி 22 வருடங்களாக தமிழ்நாட்டில் கொத்தடிமையாக சிக்கித் தவித்த கொண்டகோரி சுக்கையா என்கிற கோனேரு அப்பாராவ் இறுதியாக தனது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார்.

2003 ஆம் ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்களை விட்டுப் பிரிந்த அப்பாராவ் கொத்தடிமையாக இருந்தநிலையில், 2025 ஜனவரி 31 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால் உடனடியாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவரால் சேர முடியவில்லை.

அவருக்கு அதிக விஷயங்கள் ஞாபகத்தில் இல்லாதே இதற்குக் காரணம். ஆனால் அவர் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் பார்வதிபுரத்திற்கு அருகிலுள்ள ஜம்மிதிவல்சா, ஜிங்கிதிவல்சா போன்ற சில ஊர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஒடிசா மற்றும் பார்வதிபுரத்தின் எல்லையோர கிராமங்களில் உள்ள உள்ளூர் மக்களை பிபிசி சந்தித்தது.

By admin